காவிரி ஆற்றில் சடலம் மீட்பு - காவல்துறை விசாரணை

தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்த அடையாளம் தெரியாத ஆணின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-13 08:22 GMT

பைல் படம் 

. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் ஜூன் 11ஆம் தேதி காலை 10 மணி அளவில், அடையாளம் தெரியாத ஆண் உடல் இருந்துள்ளது. இதனைக் கண்ட பகுதி பொதுமக்கள், அருகில் உள்ள நஞ்சை புகலூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று அடையாளம் தெரியாத ஆண் உடல் இருப்பதை உறுதி செய்த மணிகண்டன், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் அடையாளம் காண்பதற்காக இருப்பு வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ஆற்றில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News