சிவகாசி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்

சிவகாசி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-18 12:54 GMT

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி (33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குருசாமி தரப்பை சேர்ந்தவர்களுக்கும் கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டது.

இது குறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.சம்பவத்தன்று மகாலட்சுமியின் வீட்டிற்கு வந்த சாந்தகுமார்,ஆனந்தகுமார், குருசாமி,சுந்தர்,மூர்த்தி, பெரியபாண்டி,மாரியப்பன், காளிராஜன்,மனோகரன் உள்ளிட்ட 11 பேர் மகாலட்சுமியிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் 11 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News