ஜாக்டோ ஜியோ கோட்டையை முற்றுகையிட முடிவு

தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி ஜாக்டோ ஜியோ வேலூர் மாவட்டத்தின் சார்பில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்

Update: 2023-12-23 08:25 GMT

தலைமை செயலகத்தை முற்றுகையிட முடிவு

தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி ஜாக்டோ ஜியோ வேலூர் மாவட்டத்தின் சார்பில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க முடிவு. பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் மாபெரும் கோட்டை முற்றுமை போராட்டத்தில் திரளாக பங்கேற்க முடிவெடுத்துள்ளது. வேலூர் மாவட்ட ஜேக்டோ ஜியோ பேரமைப்பின் மாவட்ட உயர்மட்டக்குழுவின் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனிவாசன், உயர்மட்ட குழு உறுப்பினர் அ.சேகர் ஆகியோர் கூட்டு தலைமையில் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சீனிவாசன், வரவேற்று பேசினார். ஜெயகாந்தன் சகேயுசத்யகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஜனார்த்தனன், ராமன், வாரா மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், ஜெயகுமார், சங்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சுமதி, ஊரக வளர்ச்சி துறை செல்வகுமார், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வெள்ள நிவாரண பணிகளுக்காக ஜாக்டோ ஜியோ இணைப்பு சங்க உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவது என தீர்மானித்தனர். மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில், 1. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 2. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம். 3. இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். 4.முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள், ஆகியோடருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும்.

மேலும் மேல்நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். 5. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 6. அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும். 7. 21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும். 8. 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்டுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும். 9. சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும். என 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News