இரணியலில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் ஆண் சடலம்.

இரணியலில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-08 12:20 GMT
பைல் படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் இரணியல் அருகே நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தின் அடியில்  நேற்று இரவு சுமார் 45 மதிக்கத்தக்க ஒருவர் உடல் சிதைந்த நிலையில்  ரயில் தண்டவாளத்தில் காணப்பட்டார்.  இ

து குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.    பிணமாக கிடந்தவர் முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் யார் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று விவரம் தெரியவில்லை. அவரிடம் செல்போன் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை.  தொடரந்து பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News