தியாகதுருவம் அருகே நாய் கடித்ததில் மான் பலி
தியாகதுருகம் அருகே நாய் கடித்ததில் இறந்த புள்ளிமானின் சடலத்தை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் புதைத்தனர்.;
Update: 2024-03-29 02:40 GMT
உயிரிழந்த புள்ளி மான்
தியாகதுருகம் அடுத்த எஸ்.ஒகையூர் வனப்பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே, புள்ளி மான் இறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, வனத்துறையிலிருந்து வனக்காப்பாளர் ராஜ்குமார், சு.ஒகையூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் நதியா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அங்கு, நாய் கடித்ததில் 1 வயது கொண்ட ஆண் மான் இறந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து பிரேத பரிசோனைக்கு பிறகு மகரூர் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.