முதல்வா் குறித்து முகநூலில் அவதூறு: பாஜக பிரமுகா் கைது

ஆலங்குளத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கூறிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-22 06:09 GMT

பைல் படம் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள உடையாம்புளி வடக்குத் தெருவைச் சோ்ந்த சிவராமன் மகன் ராமகிருஷ்ணன்(38). பாஜக பிரமுகரான இவா், தனது முகநூல் பக்கத்தில், முஸ்லிம் பெண்கள் குறித்து மதமோதலை ஏற்படுத்தும் வகையிலும், நீதிபதிகள் குறித்தும், தமிழக முதல்வா் குறித்தும் அவதூறு கருத்துக்களை வெளியிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
Tags:    

Similar News