திமுக மீது அவதூறு: நாம் தமிழர் கட்சி மீது வழக்கு
வலைதளங்களில் திமுக மீது அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி மீது மூன்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-03-09 07:23 GMT
மயிலாடுதுறை சின்னகண்ணார தெருவை சேர்ந்த மகாலட்சுமி(43) என்பவர் திமுகவின் மாவட்ட வலைதள பொறுப்பாளராக இருந்து வருகிறார். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், தனது முகநூல் பதிவில் திமுக கட்சிப் பற்றிய தகவலை பதிவு செய்துவருவதை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் காளிதாஸ் , தவறாகவும் கொச்சைப்படுத்தியும் அதில் பதிவு செய்துள்ளார் , இதனால் மன உளைச்சல் அடைந்ததாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் கேட்டிருந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் சம்பந்தப்பட்ட முகநூல் ஆதாரங்களை கைப்பற்றி காளிதாஸ் மீது 509, 500, 67 (A) IT act ஆகிய மூன்று சட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.