கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

திருவண்ணாமலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-26 09:41 GMT

கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

திருவண்ணாமலையிலிருந்து கள்ளகுறிச்சி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வாழவச்சனூரில் இப்பணிகள் நடக்கிறது. இப்பகுதியில் இருபுறமும் கால்வாய் அமைக்காமல் சாலை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இரு புறமும் கால்வாய் அமைத்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News