ஆத்தூர் : தேமுதிக நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை ௯ட்டம் !

ஆத்தூர் உடையார் பாளையத்தில் தேமுதிக நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ ஆர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-29 09:48 GMT

தேமுதிக

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக ஆத்தூர், ஏற்காடு கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இ ஆர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசந்திரன் கலந்துகொண்டு வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து எடப்பாடி யார் அண்ணியார் தலைமையிலான கூட்டணியில் மாபெரும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் கட்சியில் உட்பூசல்களை கலைத்து தீவிர பிரச்சாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டும். தேமுதிக நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளுடன் இணைந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் கொங்கு கணேசன், மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அதிமுக நகரச் செயலாளர் மோகன் தேர்தல் பொறுப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News