பாஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜ ., அரசைக் கண்டித்து, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-02 14:50 GMT

மத்திய பாஜ ., அரசைக் கண்டித்து, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது பட்டியலின மாணவர் சுமேஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட தை கண்டித்தும், இதற்காக அந்த மாநில பாஜக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இப்பிரச்னையில் போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பாசிச, மக்கள் விரோதபோக்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவின் தலைவர் சேகர் தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை.ராமமூர்த்தி, எஸ்.சி. பிரிவின் மாவட்டப் பொருளாளர் புஷ்பராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News