இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

Update: 2023-10-29 12:52 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லம் உள்ளது. அக்.27 இரவு, இந்த அலுவலகத்தில் மர்ம நபர்கள் பாட்டில், கற்கள் உள்ளிட்ட பொருட்களால் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை அலுவலகம் மீதான தாக்குதலை கண்டித்து, பேராவூரணி பெரியார் சிலை அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றிய, நகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Advertisement

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் துரை. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.  இதில், நகரச் செயலாளர் மூர்த்தி, மூத்த தோழர் பாரதி வை.நடராஜன், நிர்வாகிகள் சித்திரவேல், தங்கராஜ், செல்வராஜ், மைக்கேல்ராஜ் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News