கும்பகோணத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மனிதநேய மக்களுக்குச் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-07-05 10:22 GMT

போராட்டம்

தஞ்சை வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் மாலை அளவில் மாவட்ட தலைவர் ஏ. ஹிபாயத்துல்லா தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ருசி மைதீன், மாவட்ட பொருளாளர் பொகருதீன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது ரிஃபாயி, முஹம்மது செல்லப்பா, சி.ராஜ்,மமக மாவட்ட துணை நிர்வாகிகள் நூருல் அமீன், பஜருல்நூர் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருமங்கலம் ஷமீம் கலந்துக்கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தமுமுக மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம் நன்றி கூறினார். இந்நிகழ்வில் இ.பி.பே மாவட்ட செயலாளர் சாதிக்பாட்ஷா, மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் அப்துல் காதர், மாவட்ட விவசாய அணி செயலாளர் முஹம்மது பாரூக் மற்றும் பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News