கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூல் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கருப்பு பேட்ச் அணிந்தவாறு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-01-06 05:32 GMT

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் , கருப்பு பேட்ச் அணிந்து கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் பெரம்பலூர் வட்டத் தலைவர் முகமது ஷேக் பின் அலவி, தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை மிரட்டும் வருவாய் நிர்வாகத்தை கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எவ்வித தொழில் நுட்ப வசதியும் வழங்காமல், டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்த வேண்டும், டிஜிட்டல் மயம் என்ற பெயரில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் பணிச்சுமையை திணிக்கக் கூடாது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொருளாளர் ராஜதுரை, செயலாளர் சுரேஷ், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News