செங்கோட்டை பேருந்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முன்பு, அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியூ ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-20 05:18 GMT
ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முன்பு, அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியூ ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியூ மாவட்ட பொருளாளர் தர்மராஜ் தலைமையில் சிஐடியூ தொழிலாளர்கள் கலந்து கொண்டு, புதிதாக நியமனம் செய்யப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி சம்பளம் வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் சிஐடியூ கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளம் முன்னோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.