சிங்கபெருமாள் கோவில் அருகே 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சிங்கபெருமாள் கோவில் அருகே ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-29 15:52 GMT
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே பாரேரி சாலை சந்திப்பில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலை மதிப்பற்ற மனித உயிர்கள் விபத்துக்களை தவிர்க்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஒன்றிய கவுண்சிலர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரி சங்கங்களின் பேரமைப்பு, அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம், மோட்டர் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம், மனித உரிமைகள் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு, சுற்றுசூழல் மற்றும் மனித நல மேம்பாட்டு கழகம், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்ற தடுப்பு அமைப்பு,

டாக்டர் APJ அப்துல்கலாம் மக்கள் பொது நல அமைப்பு, அன்னை தெரேசா மக்கள் நல அறக்கட்டளை, வேன் உரிமையாளர்கள் சங்கம், குடியிருப்புபோர் நல சங்கங்கள் மற்றும் சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி பாரேரி இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News