சிவகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-03-08 01:09 GMT
சிவகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாரத ஸ்டேட் வங்கியையும், மத்திய அரசையும் கண்டித்து, வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் வழக்கறிஞர் சங்கை கணேசன் தலைமையில், வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் OBC மாவட்ட தலைவர் திருஞானம், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News