கலசபாக்கத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-15 15:47 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாரத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலங்கார மங்கலம் ஊராட்சியில் முன் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு அகற்றியதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News