திருவாரூர் பேருந்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-20 05:20 GMT

ஆர்பாட்டம் 

திருவாரூர் பழைய பேருந்து பணிமனை முன்பு போக்குவரத்து கழகங்களின் ஓய்வு பெற்ற தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கிளை தலைவர் அண்ணாதுரை தலைமையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 2003 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது துணை பொது செயலாளர் மோகன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News