டெங்கு காய்ச்சல்; கூலித் தொழிலாளி பலி

பொள்ளாச்சி அருகே உள்ள சிறுகளந்தையை சேர்ந்தவர் ராம்குமார் என்ற கூலித் தொழிலாளி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-01-26 15:41 GMT

பைல் படம்

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள சிறுகளந்தையை சேர்ந்தவர் குருச்சந்திரன் மகன் ராம்குமார் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.காய்ச்சல் பாதிப்பு குறையாத காரணத்தினால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது ராம்குமாருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அதற்கான சிகிச்சை அளிக்கபட்டது.

உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்ததை தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News