தாயார் இறந்ததால் மனவிரக்தியில் மகன் தூக்கிட்டு தற்கொலை
தாயார் இறந்ததால் மனவிரக்தியில் மகன் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-26 04:43 GMT
தற்கொலை
மகன் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, நாணப்பரப்பு ,புதிய அக்ஷ்யா மில், குவாட்டர்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் ஷங்கர்பாண்டி மகன் செந்தில்குமார் வயது 20. இவரது தாயார் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உடல்நலம் குன்றி உயிரிழந்தார். அப்போது இருந்து மனவிரக்தியில் வாழ்ந்து வந்த செந்தில் குமார் பிப்ரவரி 24ஆம் தேதி காலை 6 மணி அளவில் நாணப்பரப்பு, மௌலானா ஆசாத் மில்லில் உள்ள வாட்ச்மேன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த செந்தில்குமாரின் தந்தை சக்கரபாண்டி இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த செந்தில்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.