கந்த சஷ்டி : மருதமலை கோவிலுக்கு வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு தடை

Update: 2023-11-17 07:59 GMT

மருதமலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை: முருக பெருமானின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறுகிறது. இந்நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லவும் மலைப்பாதையில் நடைப்பாதையாக பயன்படுத்த பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கபட்டுள்ளது. பக்தர்கள் மலைப்படிகள் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயிலின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் மலைகோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News