திருவண்ணாமலையில் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் கிரிவலம் !!
திருவண்ணாமலையில் கொளுத்தும் வெயிலில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர் .;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 09:26 GMT
கிரிவலம்
திருவண்ணாமலையில் இன்று மாலை 7.30 மணி வரை பௌர்ணமி உள்ளதால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் மலைப்பாதை சுற்றி வந்தனர். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் உள்ளூர் மற்றும் வெளியூர் நகர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கிரிவலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு வழியில் அன்னதானம் வழங்கப்பட்டது.