மகரநோன்பு முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம்

மகரநோன்பு முன்னிட்டு மநீம சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Update: 2023-10-25 05:23 GMT

மகரநோன்பு அன்னதானம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழகம் முழுவதும் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் சரஸ்வதி பூஜை மறுதினம் விஜயதசமி விழாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விஜயதசமி விழாவினை விருதுநகரில் மகர நோன்பு என்னும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் இளைஞர்கள் புலி வேடமணிந்து வருவதை விருதுநகர் மக்கள் குடும்பமாக வந்து வேடிக்கை பார்ப்பார்கள். அதனை முன்னிட்டு திருவிழாவினை பார்க்க வரும் பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர் மேலும் இந்த நிகழ்வின்போது நகரச் செயலாளர் கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், மாவட்ட நற்பணி அணி துணை அமைப்பாளர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்
Tags:    

Similar News