திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருத்துறைப்பூண்டி வித்வான் மாணிக்கால் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

Update: 2024-04-16 04:10 GMT

திருத்துறைப்பூண்டி வித்வான் மாணிக்கால் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வித்வான் மாணிக்கால் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த நான்காம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதன் தொடர்ச்சியாக திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

தொடர்ந்து மகா பாரத கதையும் கோவில் வளாகத்தில் துரியோதனனின் படுகளம் நிகழ்ச்சியும் திரௌபதி அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் செடில் காவடி எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags:    

Similar News