அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு முழுநேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-18 07:59 GMT

பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நேரடி இரண்டாமாண்டு முழுநேரம் தொழில்பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக மே-20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் : www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் அல்லது கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கல்வி பாடப்பிரிவுகளான சிவில் மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் மற்றும் EEE, ECE ,Computer, ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் மட்டுமே, மாணவர்கள் பதிவு கட்டணத்தை Credit Card, Debit card, மற்றும் Net Banking மூலமாக செலுத்தலாம். SC,ST மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மே 20 ஆம் தேதி அன்று கடைசி நாளாகும்.

மாணவர் சேர்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் அறிய அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 04328-243200,தொலைபேசி அல்லது 9443708597, செல்பேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கல்லூரி முதல்வர் முகேஷ் குமார் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News