மதுவால் ஏற்பட்ட விபரீதம்- மனைவியுடன் ஏற்பட்ட தகராறு- கணவன் தூக்கிட்டு தற்கொலை !
மது அருந்தி வந்ததால் கணவன் மனைவி குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-09 12:27 GMT
காவல்துறை
மதுவால் ஏற்பட்ட விபரீதம்- மனைவியுடன் ஏற்பட்ட தகராறு- கணவன் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, கஸ்பா முன்னுர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 56 . இவரது மனைவி அம்பிகா வயது 54. ராஜா அண்மைக்காலமாக தொடர்ந்து மது அருந்தி வந்ததால் ராஜாவுக்கும் மனைவி அம்பிகாவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால், ராஜா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், ஏப்ரல் எட்டாம் தேதி கிரஷர் மேடு பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தற்காலிக கூடாரத்தில் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த ராஜாவின் மனைவி அம்பிகா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.