ஒழுக்கமும் கடின உழைப்பும் முன்னேற்ற பாதைக்கு வித்தாகும்: நீதிபதி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா:- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சௌந்தர் கலந்துகொண்டு 1,264 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

Update: 2024-03-23 15:14 GMT

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நீதிபதி

மயிலாடுதுறையில் பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமாக தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் தலைமையில நடைபெற்ற விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சௌந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 1,264 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது அவர் மாணவர்கள் சரியான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு வாழ்வில் முன்னேற வழிகாட்டும் என்றும் ஒழுக்கமும், கடின உழைப்பும் முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் வித்தாகும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில், கல்லூரிச் செயலர் செல்வநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News