திருச்சி காவிரியாற்றில் சுவாமி சிலை கண்டெடுப்பு

திருச்சி காவிரியாற்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்ட மதுரைவீர சுவாமி சிலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2024-01-31 09:49 GMT

திருச்சி காவிரியாற்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்ட மதுரைவீர சுவாமி சிலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

திருச்சி மேல சிந்தாமணியருகே காவிரி ஆற்றில் பாலத்தின் அடியில் தண்ணீரில் பாதி மூழ்கிய நிலையில் சுமாா் மூன்றடி உயரமுடைய மதுரைவீர சுவாமி சிலை இருந்ததை கண்ட பொதுமக்கள் கோட்டை போலீஸாருக்கு தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா் பொதுமக்கள் உதவியுடன் சிலையை மீட்டனா்.

பின்னா் நடத்திய விசாரணையில், சிலையின் கையில் வாள் வைத்திருந்த பகுதி உடைந்திருந்தது. ஆகவே சிலையை செய்தவா்களே கைப்பகுதி உடைந்துவிட்டதால் ஆற்றில் வீசியிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா். மீட்கப்பட்ட சிலையை போலீஸாா் திருச்சி கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். அந்த சிலை பழைமையானதா என கண்டறிய இந்து சமய அறநிலையத்துறை அல்லது தொல்லியல்துறைக்கு அனுப்ப வட்டாட்சியா் அலுவலகம் தரப்பில் முடிவு செய்துள்ளனா்.

Tags:    

Similar News