திருப்பூர் காதர்பேட்டையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

திருப்பூர் காதர்பேட்டையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் வாகனத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஊழியர் செய்து அனுப்பி வைத்தார்.

Update: 2023-12-24 13:37 GMT

தென் மாவட்டத்திற்கு செல்லும் வாகனம்

திருப்பூர் காதர்பேட்டையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் வாகனத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஊழியர் செய்து அனுப்பி வைத்தார்.

தென் தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட, திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், தலைமை பொதுக்குழு உறுப்பினரும், அர்-ரஹ்மான் அறக்கட்டளை தலைவர்.சலீம் (எ) அப்துல் ரகுமான் ஏற்பாட்டில் ரூ.35 லட்சம் மதிப்பிலான உடைகள் அடங்கிய நிவாரண பொருட்களை, தி.மு கழக துணை பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி புறப்பட்ட நிவாரண பொருள் வாகனத்தை  திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர்,

தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் T.K.T மு.நாகராசன், பகுதி செயலாளர்கள் மு.க.உசேன், மியாமி அய்யப்பன், மாவட்ட துணை செயலாளர் டிஜிட்டல் சேகர், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் திவாகரன்,  மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News