ராயனூர் அருகே தகாத உறவால் தகராறு. இருவர் கைது

ராயனூர் அருகே தகாத உறவால் தகராறில் பெண்ணை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-07 13:02 GMT

ராயனூர் 

 கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பாரதிதாசன் நகர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது மதிக்கத்தக்க பெண். இவருக்கும், கரூர் ஆலமரத்து தெருவை சேர்ந்த ராஜகுரு என்ற நபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதனிடையே ஜூன் 3-ம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில், 36 வயது மதிக்கத்தக்க பெண் ராயனூர்,4- ரோடு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். இதனை கவனித்த ராஜ குருவின் சகோதரர்கள் ராஜகணபதி மற்றும் ராஜ்கமல் ஆகிய இருவரும்,பெண் ஓட்டிச் சென்ற காரை தடுத்து நிறுத்தி, தகாத செயலில் ஈடுபட்ட பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

பெண்ணை தகாத வார்த்தை பேசி திட்டிய ராஜகணபதி மற்றும் ராஜகமல் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags:    

Similar News