சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

திருப்பூர் புத்தகத் திருவிழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் மூலம் சிறைவாசிகளுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள புத்தகங்களை கிட்ஸ் கிளப் பள்ளி நிறுவனத் தாளாளர் மோகன் கார்த்திக் வழங்கினார்.

Update: 2024-02-08 03:48 GMT

புத்தகங்கள் வழங்கல் 

தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 20 வது புத்தகத் திருவிழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் சார்பில் தலைவர்  மோகன் கே கார்த்திக் மற்றும் இயக்குனர்  நிவேதிகா சிறைவாசிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினார்கள். உடன் பின்னல் புக் ட்ரஸ்ட் நிர்வாகிகள் காமராஜ், ஈஸ்வரன் மற்றும் ஆசிரியர் பாலு ஆகியோர். கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News