மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் வழங்கல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.12 லட்சத்தில் நிவாரண பொருட்கள் குறு, சிறு தொழில் சங்கத்தினர் வழங்கினர்.

Update: 2023-12-14 10:07 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.12 லட்சத்தில் நிவாரண பொருட்கள் குறு, சிறு தொழில் சங்கத்தினர் வழங்கினர்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மிக்ஜம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு வழங்குவ தற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், பல்வேறு சங்கங்கள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன,

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம் சார்பில் சென்னை பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக அரிசி, மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் 120 எண்ணிக் கையிலும், பூத்துறை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 60 தொகுப்புகளும், பட்டானூர் தொழில் மற்றும் வர்த்தக சங்கம் சார் பில் 20 தொகுப்புகளும் ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 200 தொகுப்புகளை கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணனிடம் மாவட்ட குறு, சிறு தொழில் சங்க தலைவர் அம்மன் கோ.கருணாநிதி மூலம் வழங்கப்பட்டது. அப்போது சங் கத்தின் செயலாளர் கோதண்டராமன், செயற்குழு உறுப்பினர்கள் சாம்பசிவம், பூபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News