நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ.

Update: 2024-03-05 18:01 GMT

நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ. 27.59 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா ஆகியோர் வழங்கினர். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 25 பேருக்கு தலா ரூ. 96 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ. 24 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமின்போது மனுக்கள் அளித்த 21 முஸ்லிம் பெண்களுக்கு 1.19 லட்சத்தில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் படைவீரர் நிதி வசூலில் சிறப்பிடம் பெற்று ஆளுநர் மற்றும் தலைமைச் செயலரிடம் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றோரை ஆட்சியர் பாராட்டினார்.
Tags:    

Similar News