வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு
தி. மலையில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கி வாக்களிப்பு அவசியம் குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-07 10:04 GMT
பரிசு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்
திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து,
இளைஞர்களிடையே நடைபெற்ற வாலிபால் போட்டியில் வெற்றி பெற்று முதல் நான்கு இடத்தை பிடித்தவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் பரிசு தொகையினை வழங்கினார்.மேலும்100% வாக்களிப்பது குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தினார்