வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட மதிப்பெண் பாளையம் நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-01 06:43 GMT
பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, தருமபுரி மதிகோன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும் வாக்களிப்பதை குறித்து கையேடுகள் வழங்கினார். மற்றும் மதிகோன் பாளையத்தை சேர்ந்த பொது மக்களிடம் 100% வாக்களிப்புதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வாக்குச்சாவடி மையத்தில் பொது மக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள் உள்ளதாகவும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் வாக்களிக்க வரும் நபர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து இருப்பதையும் பொது மக்களிடம் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில், தருமபுரி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.காயத்ரி, வட்டாட்சியர் ஜெயசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News