செங்கபட்டு அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

செங்கபட்டு அருகே நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-01-19 11:43 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம்,சித்தர்க்காடு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சிற்றரசு தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு ரூபாய் 3லட்சம் மதிப்பிட்டில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, தையல் இயந்திரம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை,

நல வாரிய அட்டை, தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் மற்றும் பழ செடிகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Tags:    

Similar News