மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ப்ரைம்‌ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

Update: 2024-01-23 08:51 GMT

ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ப்ரைம்‌ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ப்ரைம்‌ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் 250.க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றன. இந்த போட்டிக்கு ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மற்றும் கஸ்தூரிபா மருந்தியல் கல்லூரியின் தலைவர் திரு.கா. சிதம்பரம் அவர்கள் இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சதுரங்க குழுவின் தலைவர் திரு.ஞானசேகரன் அவர்களும் மாவட்ட சதுரங்க நடுவர் முத்துக்குமாரசாமி அவர்கள் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் கல்வி இயக்குனர் பா. சுப்பிரமணியம், பள்ளியின் இயக்குனர் மணிவண்ணன், பள்ளியின் முதல்வர் மோகன் குமார், ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News