கல்லிடைக்குறிச்சியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

கலைவாணி சிலம்பாட்ட குழு நடத்திய மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

Update: 2024-02-26 06:46 GMT

சிலம்பாட்ட போட்டி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் இன்று கலைவாணி சிலம்பாட்ட குழு இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியை நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபித்தனர். நடுவராக கணேசன் செயல்பட்டார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் பண்டார சிவன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
Tags:    

Similar News