மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.

Update: 2023-12-01 10:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்டம் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை ஸ்ரீ பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா MBBS MLA அவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் இணைந்து விளையாடி மாணவர்களை ஊக்குவித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியபோது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News