காவல்துறை ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்

திருவாரூர் தொகுதியில் வாக்குப்பதிவு நாள் அன்று சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.

Update: 2024-04-13 07:04 GMT

காவல்துறை ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாரூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனி பிரிவு காவலர்கள் வாக்குப்பதிவு நாள் அன்று சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருள்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News