தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டம், எடப்பாடி தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-19 01:38 GMT

ஆலோசனை கூட்டம்

எடப்பாடி தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சுரேஷ்பாபு கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அடுத்த மாதம் இடங்கனசாலை பஸ் நிலையம் எதிரே விஜய பிரபாகரன் தலைமையில் நடைபெற இருக்கும் சேலை விசைத்தறி தொழிலாளர்களின் நலன் பாதுகாக்க வேண்டி அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன் ஏற்பட்டிருக்கான ஆலோசனை, மற்றும் பாராளுமன்றத் தேர்தல் யூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நகரம், ஒன்றியம்,பேரூராட்சி மற்றும் வார்டு செயலாளர்கள் கலந்துகொண்டு அவரவர் கருத்துக்களை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி,மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் பாலாஜி, செல்வராஜ், அமுதா பூனா,செயற்குழு உறுப்பினர் சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கனகராஜ்,முருகன் மீனாட்சி சுந்தரம்,ஒன்றிய கழக செயலாளர்கள் மெய்வேல்,மாரியப்பன், தங்கம்,ராஜ்குமார்,விஜயபூபதி ஆரோக்கியராஜா, கனகராஜ் மாதேஷ் நகர கழகச் செயலாளர்கள் ஜீவானந்தம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News