மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேமுதிக சார்பில் மனு!
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-26 13:55 GMT
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் போல் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரியும், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தேமுதிக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்போது தேமுதிக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.