மயிலாடுதுறை அருகே அறக்கட்டளை மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகம் இலவச மருத்துவ முகாம்

தரங்கம்பாடி அருகே சமூக நல அறக்கட்டளை மற்றும் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பொது மருத்துவம் மற்றும் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்

Update: 2024-09-28 18:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரியில் உள்ள ஹமீதியா மேல்நிலைப் பள்ளியில் ஆயப்பாடி சமூக நல அறக்கட்டளை மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி இணைந்து மூன்றாம் ஆண்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு பொது மருத்துவம் மற்றும் ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார் . இதில் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர் மேலும் சர்க்கரை நோய், எலும்பு முறிவு, குழந்தைகள் நலம், கண் பரிசோதனை, தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனை பொது மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டு ஆலோசனை வழங்கி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது இம்முகாமில், முஜிபுர்ரகுமான் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News