மேட்டூரில் திமுக கவுன்சிலரை போலீசார் அதிரடி கைது !

மேட்டூர் அருகே மேச்சேரி ஆட்டு சந்தை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக திமுக கவுன்சிலரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-04-06 09:33 GMT

திமுக

மேட்டூர் அருகே மேச்சேரி ஆட்டு சந்தை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் சத்யபிரியாவுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் ஜேசிபி மூலம் டிப்பர் லாரியில் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தி அப்பகுதியில் விசாரணை நடத்தினார்.

அங்கு வந்த 7-வது வார்டு திமுக கவுன்சிலர் விமல் (42) கிராம நிர்வாக அலுவலர் சத்திய பிரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் கிராம நிர்வாக அலுவலரின்  மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து வைத்துக்கொண்டு தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.

இது தொடர்பாக சத்திய பிரியா மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் திமுக கவுன்சிலர் விமலை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது தகாத வார்த்தையால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சார படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News