நாகர்கோவிலில் இன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழ கூட்டம் 

நாகர்கோவிலில் இன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழ கூட்டம்  நடந்தது. இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டார். 

Update: 2024-02-06 10:45 GMT


நாகர்கோவிலில் இன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழ கூட்டம்  நடந்தது. இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.


திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக கனிமொழி எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம்  கலந்துரையாடி  வருகின்றனர்.       அந்த வகையில்  இன்று கனிமொழி எம்பி தலைமையில் நாகர்கோவில் மூன்று மாவட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல் தொடங்கியது.  நாகர்கோவில் தேரை காவல் புதூரில் உள்ள நடைபெற்ற இந்த முகாமில்  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட பகுதியினரிடம் தேர்தல் அறிக்கை  கோரிக்கைகளை தேர்தல் குழுவினர் மனுக்களாக பெற்றுக் கொண்டனர்.       இந்த குழுவினரிடம் தொழில்துறையினர், வியாபாரிகள், மீனவர்கள், தொழில் முனைவோர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வழங்கினர்.
Tags:    

Similar News