மதுராங்கத்தில் திமுக கல்வெட்டு திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

மதுராங்கத்தில் திமுக கல்வெட்டை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2023-12-02 09:56 GMT

திமுக கல்வெட்டு திறப்பு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சரவம்பாக்கம் கிராமத்தில் கிராமங்கள் தோறும் திமுக என்ற அடிப்படையில் புதிய கழக கல்வெட்டு மற்றும் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் பிரியாசக்கரபாணி ஏற்பாட்டிலும், வேட்டூர் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணா ஆகியோர் ஏற்பாட்டில் கழக கல்வெட்டு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், ஒன்றிய கழக செயலாளர் பொன்சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கல்வெட்டுகளை திறந்து வைத்து அன்னதானம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் அணைகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News