அதிமுகவில் இணைந்த திமுகவினர்- முன்னாள் அமைச்சர் வாழ்த்து

அரியலூர் மாவட்டத்தில் திமுக தொண்டர்கள் அக்கட்டுரையில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2024-02-02 10:01 GMT

அதிமுகவில் இணைவு 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய பகுதியை சேர்ந்த திமுகவினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைப்பெற்றது. முன்னாள் அரசு கொறடா தாமரை. இராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் தா.பழூர் ஒன்றிய பகுதியை சேர்ந்த திமுகவினர் 15 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

இதனையடுத்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.ஜெயலிங்கம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News