அயனம்பாளையத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் அமைச்சர்கள்

அயனம்பாளையத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் திமுக அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-06-30 15:37 GMT

வாக்கு சேகரித்த திமுக அமைச்சர்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, அயனம்பாளையம் ஊராட்சியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து இன்று (ஜூன் 30) தமிழக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் சக்கரபாணி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

உடன் ஜெகத்ரட்சகன் எம்பி, திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதம சிகாமணி உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News