திராவிட மாடலில் கிக் முக்கியம் என திமுக நினைக்கிறது -வானதி சீனிவாசன்

திராவிட மாடலில் 'கிக்' தான் முக்கியம் என திமுக நினைக்கிறது என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.

Update: 2024-07-01 08:47 GMT

 திராவிட மாடலில் 'கிக்' தான் முக்கியம் என திமுக நினைக்கிறது என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார். 

கோவை: வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சட்டமன்றத்தில் கோவை தொகுதிக்கு குரல் கொடுக்கும் போது கோவைக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்துள்ளதாக துறை சார்ந்த அமைச்சர்கள் கூறுகின்றனர்.அமைச்சர்கள் கோவைக்கு வரும் போது வாய்ப்பிருந்தால் எனது தொகுதிக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசமுற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை எனவும் பேசிய வீடீயோக்களை கேட்டால் வெட்டியும்- ஒட்டியும் கொடுக்கப்பதாக கூறியவர் சட்டமன்றத்தில் ஜனநாயகமாக பேசவிடுவதில்லை என்றார்.மேட்டுபாளையம் கோத்தகிரி சாலையில் நீட் எதிரான வாசகங்கள் மற்றும் இந்தியா ஒழிக என்று என்று எழுதி உள்ளனர் இது கண்டிக்கதக்கது எனவும் மத்திய,மாநில அரசுக்கு இடையே முரண்பாடுகள் இருக்கலாம்.ஆனால் இது போன்று இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்களை தடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை திமுக அரசு ஊக்குவிக்க கூடாது என்றார்.

30 நாட்களுக்கு மேலாக நடக்கும் மானிய கோரிக்கை இந்த முறை 8 நாட்களுக்குள் முடிவடைந்தது மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும் தமிழகத்தை போன்ற முக்கிய மாநிலத்திற்க்கு இந்த நாட்கள் போதாது என்ற அவர் மக்களின் பிரச்சனையை ஆழமாக விவாதிக்க அதிக நாட்கள் வேண்டும் என்றார்.எதிர்கட்சிகள் சட்டமன்றத்தில் பேசுகையில் அதிக குறிக்கீடுகள் உள்ளதாகவும் தொகுதி மக்களிக்காக பேசும் வீடீயோவை கூட தரமறுப்பாதாக குற்றம் சாட்டினார்.ஜனநாயக தன்மையோடு இயங்காத சட்டபேரவையில் சவாலோடு பேசவேண்டியதாக இருப்பதாக தெரிவித்தார்.நல்ல தலைவர்கள் தமிழகத்திற்க்கு வர வேண்டும் என்று நடிகர் விஜய சொன்னதில் எந்த மாற்று கருத்தில்லை எனவும் படித்தவர்களைவிட மக்களுக்காக உணர்வுபூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலில் தேவை என்ற அவர் சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்திருக்கலாம்

ஆனால் அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்க்கு பிறகு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் என்றார். மத்திய அரசு காலசூழலுக்கு ஏற்றவாறு சட்டதிருத்திங்களில் திருத்தம் கொண்டு வந்திருந்தாலும் பெயரை பொறுத்தளவுக்கு இந்தி,சமஸ்கிருதம் ஆகிய மொழி தெரியாதவர்களுக்கு சில வார்த்தைகளை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளதாகவும் இதை மத்திய தலைமையிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

சட்டத்தில் பலதிருத்தங்கள் தேவைப்படுவதாகவும் உயர்கல்விதுறை பொறுத்தவரை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கவர்னருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எதிரான மனநிலையோடு பேசுவது உயர்கல்வி துறையில் சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும் நீயா-நானா என்கிற வகையில் மாநில அரசு எடுத்துகொள்கிறது என்றார்.ஆளுனர் பொதுவெளியில் பேசுவதை இவர்களின் சித்தாந்திற்க்கு எதிராக பேசுவதாக எடுத்து கொண்டு அவருக்கு எதிராக பேசுவது உயர்கல்விதுறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய சூழல் உள்ளதாக தெரிவித்தார்.

திராவிட மாடலில் கிக் தான் முக்கியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் எனவும் நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றவர் பரப்பரப்பாக பிரேக்கிங் செய்தி வரக்கூடிய பிரச்சனைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேல்படிப்பிற்கு செல்வதாக வெளியாகும் தகவல் குறித்து கேட்டபோது "எனக்கும் அது குறித்து தெரியாது எனவும் அவரிடம் இன்னும் அதுகுறித்து பேசவில்லை" என பதில் அளித்தார்.

Tags:    

Similar News