திமுக இளைஞரணி மாநாடு தொடர் ஜோதி ஓட்டம்

செங்கல்பட்டில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தில் ஏரளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-19 04:50 GMT
இளைஞரணி மாநாடு தொடர் ஜோதி ஓட்டம்
 சென்னையில் நேற்று திமுக இளைஞரணி மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தை திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டில் ஆலப்பாக்கம் ஊராட்சியில் ஜி.எஸ்.டி .ரோட்டில் மாநாட்டு சுடர் ஓட்டத்தை, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் வரவேற்று சுடர் கையில் ஏந்தி குழுவினரோடு சிறிது தூரம் ஓடி வழியனுப்பி வைத்தார்.. நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் முன்னிலையில் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், இளைஞர் அணி நிர்வாகிகள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News